மத்திய பிரதேச மாநிலத்தில் ஹீரா என்ற எருமை மாடு ரூ:4 கோடிக்கு பேரம் பேசப்பட்டது. ஆனால் அதன் உரிமையாளர் அதை விற்க மறுத்து விட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்த முன்னாசிங் எனபவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். அவர் பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாடு ஒன்று உள்ளது. அந்த மாட்டுக்கு 5 வயது.
4 ஆண்டுகளுக்கு முன் அந்த எருமை மாட்டை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லிட்டரில் இருந்து 31 லிட்டர் வரை பால் கறக்கிறது.
இந்த எருமை மாடு வாங்கிய பின்னர்தான் முன்னாசிங்கின் பண்ணை விரிவடைந்துள்ளது, அதனால் இதை அதிர்ஷ்டமாக கருதி பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.
இந்நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டுள்ளார். ரூ.4 கோடி வரை அவர் விலை பேசியுள்ளார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.