Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருமே வழங்காத சலுகை.. ஒரு மாத ரீசார்ஜ் இவ்வளவு தான்.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு..!

Advertiesment
பிஎஸ்என்எல்

Mahendran

, வியாழன், 12 ஜூன் 2025 (13:14 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன் வழங்க முடியாத ஒரு அதிரடி சலுகையை அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்  வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பிஎஸ்என்எல் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் விலை வெறும் ₹199 தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ₹200-க்குக் குறைவான விலையில் ஒரு மாத வேலிடிட்டி உள்ள திட்டம் வேறு எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், பிஎஸ்என்எல் ₹199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
 
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி வழங்கி வருகின்றன என்றும், அது கூட ₹200-க்கு மேல் தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்என்எல் உண்மையாகவே ஒரு மாதத்திற்கான வேலிடிட்டியை அறிவித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்னும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாகக் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!