Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய குழந்தைகள் 3 பேரை பலாத்காரம் செய்த பிரட்டன் முதியவர்!

இந்திய குழந்தைகள் 3 பேரை பலாத்காரம் செய்த பிரட்டன் முதியவர்!

இந்திய குழந்தைகள் 3 பேரை பலாத்காரம் செய்த பிரட்டன் முதியவர்!
, செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:45 IST)
டெல்லியில் பார்வையற்ற மூன்று குழந்தைகளை பிரட்டனை சேர்ந்த 54 வயதான முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த பிரட்டன் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பிரட்டனை சேர்ந்த 54  வயதான முர்ரே என்ற முதியவர் டெல்லியில் செயல்பட்டு வரும் கண் தெரியாத குழந்தைகளுக்கான அமைப்புக்கு கடந்த ஒன்பது வருடமாக நன்கொடைகள் அளித்து வருகிறார். இதனால் அந்த அமைப்பின் பள்ளிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் முர்ரே.
 
இதனை பயன்படுத்தி அவர் கடந்த 2-ஆம் தேதி கண் தெரியாத மூன்று குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூரச்செயலை பள்ளியில் வைத்தே அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
 
இதனையடுத்து பிரட்டனை சேர்ந்த அந்த முதியவர் முர்ரேவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அவரது மடிக்கணினியை சோதனை செய்ததில் ஆட்சேபத்துக்குரிய சில படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முர்ரே போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புளூவேல் விபரீதம் ; ஆற்றில் குதிக்க சென்ற மாணவி மீட்பு