Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானியின் சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (17:31 IST)
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா காம்பளக்ஸில் அம்பானி  இண்டர் நேசனல் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், அங்குள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் பள்ளியில் தொலைபேசி எண்ணிற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இப்பள்ளிக்கு மோப்ப நாய்களுடன் சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக மும்பை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments