Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (18:44 IST)
ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பரிதாபாத், ஹிசார், ரோஹ்தக், கர்னல், யமுனா நகர், குருகிராம், மனேசர் உள்ளிட்ட 10 மாநகராட்சிகள் மற்றும் 21 நகராட்சிகளில்  மார்ச் 2ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும் அம்பாலா மற்றும் சோனிபட் மாநகராட்சிகளில் இடைத்தேர்தலும் நடந்தது. அதேபோல் மார்ச் 9ஆம் தேதி பானிபட் மாநகராட்சிக்கு தனித்து தேர்தல் நடைபெற்றது.
 
இந்த நிலையில் மொத்தம் 10 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில், பரிதாபாத், அம்பாலா, யமுனா நகர், ஹிசார், கர்னல், ரோஹ்தக், சோனிபட் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் பாஜக அமோக வெற்றிபெற்றது. மனேசர் மாநகராட்சியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
 
இதன் மூலம், 10 மாநகராட்சிகளில் பாஜக கட்டுப்பாட்டில் 9 மாநகராட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.  அண்மையில் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments