Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர கார் விபத்தில் பாஜக எம்.எல்.ஏ பரிதாப பலி

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (09:51 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பா.ஜ.க  எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லோகேந்திர சிங். இவர் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது கார் இன்று காலை, சிதாபூர் அருகே சென்றுகொண்டிருந்த போது சாலையின் எதிரே வந்த லாரி மீது  பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments