Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கிம்பூரை கூட விட்டு வைக்கல.. பாஜக எதிர்பாராத வாக்கு வசூல்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (11:18 IST)
உத்தர பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய தொகுதிகளிலும் பாஜக கை ஓங்கியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளில் பாஜக 265 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 133 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக அமைச்சர் சென்ற ஊர்வலத்தின் கார் மோதி லக்கிம்பூரில் விவசாயிகள் பலியான சம்பவத்தால் அங்கு பாஜக வெற்றிபெற சாத்தியமில்லை என்றே எதிர்கட்சிகள் கருதின, அதுபோல இளம்பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் மாவட்டங்களிலும் பாஜக வலிமை இழக்கும் என கருதப்பட்டது. ஆனால் இந்த தொகுதிகளில் பாஜக அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளது எதிர்கட்சிகளுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments