Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Advertiesment
Bilkis Bano

Mahendran

, வியாழன், 18 ஜனவரி 2024 (12:50 IST)
பில்கிஸ் பானு வழக்கில்  குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
2002-ம் ஆண்டு குஜராத் வன்முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில், தண்டனை பெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுவில், "எங்களுக்கு சட்ட ஆலோசனை பெற நேரம் தேவை என்றும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் எங்களுக்கு சரணடைய அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
 
சரணடைய ஜனவரி 21வரை மட்டுமே அவகாசம் இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி: சீதாராம் யெச்சூரி!