Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் 11 பேர்களில் 9 பேர் தலைமறைவா?

Advertiesment
Bilkis Bano

Mahendran

, புதன், 10 ஜனவரி 2024 (16:17 IST)
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவர்களில் 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
 
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, 11 பேரும் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 
 
இந்நிலையில், 11 பேரில் 9 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்ட எஸ்.பி.  தெரிவித்துள்ளார். தலைமறைவான 9 பேரையும் தேடி  வருவதாகவும்,  அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கில் குற்றவாளிகளான மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் ஏற்கனவே சிறையில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி மறுப்பு! | மணிப்பூர் அரசு அதிரடி