Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சிறுவன்! – பீகாரில் பீதி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:07 IST)
பீகாரில் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முறைகேடாக தயாரித்து விற்கப்படும் துப்பாகிகள் காவல்துறைக்கு தலைவலியாக மாறியுள்ளன. இதனால் மாநிங்களில் வன்முறைகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீகாரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முசாபர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளான். சிறுவனிடம் துப்பாக்கி இருப்பதை கண்ட மற்ற சிறுவர்கள் ஆசிரியர்களிடம் சொல்ல, காவல்துறைக்கு தகவல் தெரிந்து சிறுவனை சிறுவர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதை பள்ளிக்கு கொண்டு சென்றது ஏன்? என்பது குறித்து முசாபர்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு..!

நானும் அம்மாவும் வாக்களித்தோம்..! அனைவரும் வாக்களிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்..!

என்ன குழந்தை என்பதை அறிய மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்: உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

லீவ் கேட்ட காவலரிடம் பெண் செட்டப் செய்ய சொன்ன காவல்துறை அதிகாரி.. புதுவையில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments