Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகார் அடுத்த முதல்வர் யார்? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

Advertiesment
பீகார்
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகாரில் 57.05% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்
 
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் தேவை. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில், லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பு என கூறப்பட்டது. இந்த கணிப்புகள் உண்மையா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும். 
 
பீகார் மட்டுமின்றி மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் நடைபெற்ற 28 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று தெரியும். இம்மாநிலத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும் என்பதும், அதேபோல் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளில் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலா ஹாரிஸ் குடும்பம்: அம்மா ஷியாமளா, கணவர் டக்ளஸ் எம்ஹாஃப், குழந்தைகள் கோல், எல்லா