Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொதிக்கும் வெந்நீரை போலீஸ் மேல் ஊற்றிய டி.ஐ.ஜி!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (13:50 IST)
பீகாரில் வெந்நீர் சூடாக இருந்ததால் அதை காவலர் மீது டி.ஐ.ஜியே ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வருபவர் டி.கே.திரிபாதி. நேற்று முன்தினம் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள உணவகத்திற்கு சென்ற அவர், பணியில் இருந்த அமோல் காரத் என்னும் காவலரிடம் வெந்நீர் எடுத்து வர சொல்லியிருக்கிறார். காரத் பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை அவருக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்.

வெந்நீர் சூடாக இருப்பதை கவனிக்காமல் டி.ஐ.ஜி வாயில் ஊற்றிக் கொண்டதால் அவரது வாய் வெந்தது. இதனால் கோபமடைந்த திரிபாதி வெந்நீர் கொண்டு வந்த கார்த்தை அழைத்து திட்டியுள்ளார். பதிலுக்கு காரத்தும் விவாதம் செய்யவே ஆத்திரமடைந்த திரிபாதி கொதிக்கும் வெந்நீரை காரத் முகத்தில் வீசியுள்ளார்.

இதனால் முகம் வெந்த அமோல் கராத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திரிபாதியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸார் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments