Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

Siva
செவ்வாய், 1 ஜூலை 2025 (17:10 IST)
சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமார்ஹி மாவட்டத்தில் அமைந்துள்ள புனௌரா தாம் ஜானகி கோயில் உள்ளிட்ட புனித தலங்களை புணரமைக்கப்பட ரூ.882.87 கோடி மதிப்பிலான மாபெரும் வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
 
 
இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சமூக வலைத்தளமான X தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், புனௌரா தாம்மில் ஒரு பிரம்மாண்டமான கோயிலும், அதனுடன் தொடர்புடைய பிற கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
இந்த புதிய கட்டுமானப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், சீதையின் பிறப்பிடத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் வளர்ச்சி திட்ட அறிவிப்பு, அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments