Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வங்கிகள் வேலைநிறுத்தம் – இன்றே வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் !

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (08:13 IST)
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து ஒன்றாக்கும் அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த வங்கிகள் இணைப்பை வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனால் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் எண்ணிக்கைக் குறையும் என்றும் பல்வேறு பொருளாதார இக்கட்டுகள் நடக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதால் இன்றே மக்கள் தங்களுக்குத் தேவையான பரிவர்த்தனைகளை செய்துகொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments