Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கடனை வசூலிக்க வங்கிகள் ரௌடியை அனுப்பினால் என்ன நடக்கும் தெரியுமா?

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (15:33 IST)
வங்கிகளில் சாதாரண மக்கள் பலவிதமான தேவைகளுக்காக கடன் பெறுகிறார்கள். அதை திரும்ப கட்டுவதில் சில சமயம் காலத்தாமதம் ஏற்படும். சிலரால் கட்டவே முடியாத நிலையும் இருக்கும். வங்கிகள் வர்களிடம் பணத்தை வசூலிக்க ரௌடிகளை வாடிக்கையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரௌடிகள் காலை, இரவு என நேரம் பார்க்காமல் வீட்டிற்கு வருவதும் கடன் வாங்கியவர்களை மிரட்டுவதுமாக இருக்கிறார்கள். பலரை ரோட்டில் வைத்து அசிங்கப்படுத்தவும் செய்கிறார்கள். இதனால் மனமுடைந்து பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உண்டு.

இதுகுறித்து மக்களவையில் நேற்று பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் “வங்கிகள் ரௌடிகளை வைத்து சாதாரண மக்களை மிரட்டுவது மோசமான செயலாகும். கடன் பெற்றவர்களை ரௌடிகள் மூலம் மிரட்டி பணம் வசூலிக்க எந்த வங்கிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள விதிகளின்படி, கடன் பெற்றோர் கடனை செலுத்தாத பட்சத்தில் தனியார் கடன்மீட்பு நிறுவனங்கள் மூலமாகவோ, போலீஸார் மூலமாகவோ அவர்களிடம் முறைப்படி பேசி பணத்தை பெற வேண்டும். தவிர, இதுபோன்ற தவறான முறையில் பணம் வசூலித்தால் அந்த ரௌடிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது மட்டுமின்றி, வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments