சமீபத்தில் மருந்துப் பொருட்கள் தர பரிசோதனையை மேற்கொண்ட கர்நாடக சுகாதாரத்துறை பாராசிட்டாமல் உள்ளிட்ட மாத்திரை மருந்துகளை தடை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறி நேரங்களில் மக்கள் பலர் மருத்துவரை கேட்காமலே கூட மருந்தகங்களில் பாராசிட்டாமல் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை மருந்தகங்களில் விற்கும் மருந்துகளை பரிசோதனை செய்ததில் ஆபத்தான மருந்துகள் என 14 மருந்துகளை தடை செய்துள்ளது
அதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் Pomol 650 (Paracetamol IP 650 mg) மாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சோடியம் லாக்டேட் ஊசிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை சேமிக்கவோ, விற்கவோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K