Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் நீட்டிப்பு !

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:42 IST)
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

நாட்டில் பேசுபொருளாகியுள்ள இந்த வக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்திக்கு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments