Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம்- விவசாயிகள் சங்கம்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:26 IST)
பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகிறது. தமிழ் நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற விலையில் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டுமென்று பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பால்உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பால்கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும், என்று  விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மானிய கோரிக்கையின்போது கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென்று சின்னசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில், அமைச்சர் ஐ பெரியசாமி, ‘’பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொடர்பாக விரைவில் தீர்வு வரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments