Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்களை பிடிங்கி நோயாளியை கொன்ற பல் மருத்துவர்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (12:30 IST)
கர்நாடகா மாநிலம் பகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் பற்கள் தவறான முறையில் பிடிங்கப்பட்டதால் அவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகா மாநிலம் பகல்கோட் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் எனபவர் பல் வலி காரணமாக பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் வீரேஷ் மகலத் என்பவர் அப்துல் காதரின் மூன்று பற்கலை பிடிங்கியுள்ளார்.
 
இதில் அப்துல் காதருக்கு கடும் ரத்தம் கசிவு ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார். இதனால் அவரை கெ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்துல் காதர் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
அந்த புகாரில், சிகிச்சை அளித்த மருத்துவரின் கவனக் குறைவால்தான் அப்துல் காதர் மரணமடைந்துள்ளார். கெ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கோமா நிலையில் இருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவர் வீரேஷ் மகலத் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments