Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனரா வங்கியில் தீ விபத்து; ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (12:19 IST)
கனரா வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் சேதாரமின்றி தப்பியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் பஸ் நிலையம் முன்பு கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி திறக்கப்படவில்லை. மாலை சுமார் 4 மணியளவில் வங்கியில் இருந்து கரும்புகை வெளியேரியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் வங்கியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த ரூ. 40 லட்சம் மற்றும் ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
 
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து பேரையூர் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments