உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின்படி, அயோத்தியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்வு உலகின் மிகப்பெரிய கலாச்சார விழாவாக உருவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ராம்லீலா, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இணையம் வழியாக ஒளிபரப்பப்பட்டு, 62 கோடிக்கும் அதிகமான ராமர் பக்தர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனையாகும்.
3D தொழில்நுட்பம் மற்றும் நவீன மேடை அலங்காரங்களுடன், டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
நேரடி ஒளிபரப்புக்காக ₹10 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்ட நிலையில், ஷெமரூ பக்தி யூடியூப் சேனலில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
நடிகை பாக்யஸ்ரீ சீதையாகவும், விந்து தாரா சிங் அனுமாராகவும், ஷபாஸ் கான் ராவணனாகவும் நடித்தனர்.
யோகி அரசின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலம், ஸ்ரீராமரின் கதை உலகை இணைக்கும் "கலாச்சாரப் பாலம்" என்பதை அயோத்தி ராம்லீலா நிரூபித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியும் இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.