Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் பணிகள் தீவிரம்: இந்து - முஸ்லீம் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (09:02 IST)
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு இந்து - முஸ்லீம் அமைப்புகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அயோத்தி நில வழக்கில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள நகர் பகுதியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரவும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நேற்று இந்து - முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், முஸ்லீம் மத தலைவர்களும் கலந்துகொண்டனர்.
 
அந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும்போது அனைவரும் அமைதியை நிலைநாட்டுவோம், எந்தவித இடையூறுகளும் தரமாட்டோம் என அனைத்து அமைப்புகளும் உறுதியளித்தன. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments