Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதற்றமான மேற்கு வங்கம், அசாமில் நாளை தேர்தல்! – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

பதற்றமான மேற்கு வங்கம், அசாமில் நாளை தேர்தல்! – பாதுகாப்பு பணிகள் தீவிரம்
, வெள்ளி, 26 மார்ச் 2021 (08:26 IST)
இந்தியாவில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் நாளை மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பதற்றத்திற்குரிய மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோல அசாமில் 126 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?