Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சிக்கு வந்த பாஜக; பதவி விலகிய சபாநாயகர்!!

Advertiesment
ஆட்சிக்கு வந்த பாஜக; பதவி விலகிய சபாநாயகர்!!
, திங்கள், 29 ஜூலை 2019 (12:49 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
கர்நாடகாவில் எம்.ஏல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார்சாமி அரசு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். 
 
இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். 
 
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாகரனின் சதியிலிருந்து இந்தியாவை காப்பற்றியது ராஜபக்‌சே தான்.. சுப்ரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து