Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் ராணுவ அதிகாரியை கடத்திய போராட்டக்காரர்கள்.. தேடுதல் பணி தீவிரம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (18:03 IST)
மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அவரை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. 
 
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் அங்கு அமைதியை நிலை நாட்ட ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இராணுவ அதிகாரி ஒருவர் போராட்டக்காரர்களால் கடத்தப்பட்டதாகவும் இதுவரை கடத்தலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதற்கிடையே நடத்தப்பட்ட ராணுவ அதிகாரியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
மேலும் தேசிய நெடுஞ்சாலை 102ல் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது. மணிப்பூரில் ராணுவ அதிகாரிகள் கடத்துவது இது முதல் முறையல்ல, ஏற்கனவே மூன்று முறையில் ராணுவ அதிகாரிகள் மணிப்பூரில் கடத்தப்பட்டு இருப்பதாகவும் இது நான்காவது முறை என்றும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் மணிப்பூரில்   தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டாலும் இன்னும் முழுமையாக அங்கு அமைதி திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments