Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ஆதாரை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்: சென்னை பெண்ணிடம் நூதன மோசடி முயற்சி..!

Advertiesment
உங்கள் ஆதாரை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்: சென்னை பெண்ணிடம் நூதன மோசடி முயற்சி..!

Mahendran

, புதன், 6 மார்ச் 2024 (17:12 IST)
உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டதாக மர்ம தொலைபேசி அழைப்பு தனக்கு வந்ததாக சென்னை பெண் ஒருவர் கூறி அந்த மோசடியில் இருந்து தான் புத்திசாலித்தனமாக தப்பித்ததாக கூறியுள்ளார். 
 
சென்னை பெண் லாவண்யா என்பவர் தனது சமூக வலைதளத்தில் ’உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவருடன் பேசி அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவும் என்றும் அழைப்பு வந்ததாம் 
 
இதனை அடுத்து சில நிமிடங்களில் சுங்கத்துறை அதிகாரி போல் ஒருவர் பேசியதாகவும் உங்கள் ஆதார் எண் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது இதை நீங்கள் சரி செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அந்த பெண் புத்திசாலித்தனமாக இது தொடர்பாக காவல்துறை என்னை தொடர்பு கொண்டால் அப்போது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தொடர்பை துண்டித்து விட்டதாகவும் தெரிவித்தார் 
 
டெல்லியில் இதே போல ஒரு பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வந்த போது அவர் சுமார் 56 லட்சத்தை இழந்தார் மற்றும் ஒரு சிலரும் லட்சக்கணக்கில் எழுந்து உள்ளனர். ஆனால் சென்னை பெண் அந்த செய்திகளை படித்ததால் சுதாரித்துக் கொண்டு இந்த மோசடியில் இருந்து தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘புனித வெள்ளி’ அன்று தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்!