ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 17 மே 2023 (16:01 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தான நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மே 20 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இந்த முன்பதிவு தொடங்கும் என்றும் கோவிலுக்குள் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் மே 23ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள விரும்பு பக்தர்கள் நாளை முதல் தங்களது டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments