Publish Date: Mon, 15 May 2023 (18:45 IST)
Updated Date: Mon, 15 May 2023 (18:46 IST)
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிந்ததே.
அந்த வகையில் வைகாசி மாத பூஜையை முன்னிட்டு இன்று சபரிமலை நடை திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் குவிந்துள்ளனர். மே 15ஆம் தேதி அதாவது இன்று திறக்கப்படும் நடை 19 ஆம் தேதி வரை திறக்கப்படும் என்றும் வைகாசி மாத பூஜைகள் நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்கள் சிறப்பு பூஜை நடைபெற இருப்பதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதே போல் ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Mahendran
Publish Date: Mon, 15 May 2023 (18:45 IST)
Updated Date: Mon, 15 May 2023 (18:46 IST)