Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூங்கும் போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம்: ஆப்பிள் எச்சரிக்கை..!

Advertiesment
தூங்கும் போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம்: ஆப்பிள் எச்சரிக்கை..!
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (16:01 IST)
தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இது குறித்து வெளியான அறிவிப்பில்  சார்ஜ் உடன் இருக்கும் மொபைல் போன் அருகில் இருக்கும் போது தூங்குவதால் சில அபாயங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 
 மின்சார  ஷாக், தீ விபத்து ஆகியவை  ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தூங்கும் போது அருகில் செல்போனை சார்ஜ் போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
அதுமட்டுமின்றி தீப்பிடித்தல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க நல்ல காற்றோட்டமான இடத்தில்  சார்ஜ் செய்வதை உறுதி செய்யுமாறும் ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பயனர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா, ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்.. தேதி அறிவிப்பு..!