Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சி தலைவர்களின் மொபைல் போன் ஹேக்.. எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பிய ஆப்பிள்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:22 IST)
எதிர்க்கட்சி தலைவர்கள் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சசி தரூர் உள்ளிட்டவர்களின்  ஆப்பிள் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உங்கள் ஐபோன் ஹேக் செய்யப்படுகிறது என மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர்.

சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோருக்கு இந்த எச்சரிக்கை குறுஞ்செய்தி ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டுள்ளது.  

இதனை அடுத்து சுதாரித்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது மொபைல் போனை ஹேக்கர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர்.. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் ஹேக்கர்களின் இந்த முயற்சிக்கு மத்திய அரசே காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments