Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

Advertiesment
Bridge collapse in Maharashtra

Prasanth K

, ஞாயிறு, 15 ஜூன் 2025 (19:17 IST)

மகாராஷ்டிராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வரும் திடீர் விபத்து சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்திரயானி ஆற்றில் வெள்ளம் நிரம்பி வழியும் நிலையில் அதை காண ஏராளமானோர் பாலத்தில் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 10 முதல் 15 பேர் வரை ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!