Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியால் பாஜகவுக்கு சுக்கிரதிசை..! – அண்ணாமலை மகிழ்ச்சி!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (09:46 IST)
ராகுல்காந்தி மோடி குறித்து விமர்சித்துள்ளதால் தமிழகத்தில் பாஜகவுக்கு சுக்கிரதிசை அடித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட பாஜக வேட்பாளர்களோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் காங்கிரஸ் ஐசியூ வார்டு நோயாளி போல உள்ளது. திமுக தரும் ஆக்ஸிஜனில்தான் அவர்கள் இயங்குகிறார்கள். ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு இனிப்பு வழங்க திட்டமிட்டேன்.  ராகுல் காந்தி மோடியை பற்றி பேசிய போதெல்லாம் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றனர். தற்போது தமிழகத்திலும் போட்டியின்றி பல பாஜக வேட்பாளர்கள் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments