Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு தாவும் ஆந்திர மதுப்பிரியர்கள்! – விலையை குறைத்த ஆந்திரா!

தமிழகத்திற்கு தாவும் ஆந்திர மதுப்பிரியர்கள்! – விலையை குறைத்த ஆந்திரா!
, திங்கள், 20 டிசம்பர் 2021 (09:31 IST)
ஆந்திராவில் இருந்து மதுப்பிரியர்கள் தமிழகம் படையெடுப்பதை தவிர்க்க விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளை நடத்தி வருவது போல ஆந்திராவில் அரசின் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக ஆந்திரா அரசு மதுபானங்களின் விலையை 50 சதவீதம் உயர்த்தியது. இது மதுப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனால் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மதுப்பிரியர்கள் மது வாங்குவதும், அங்கிருந்து ஆந்திராவிற்கும் மதுவை கடத்துவதாகவும் இருந்து வந்தனர். இதனால் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க யோசித்த ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை தற்போது 20 சதவீதம் வரை குறைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!