Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பாய்ந்த கார்; குழந்தையை தூக்கி வீசி காப்பாற்றிய நபர் – வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (17:04 IST)
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் விழுந்து மூழ்கிய காருக்குள்ளிருந்து குழந்தையை எடுத்து கரையில் வீசி காப்பாற்றிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா என்னும் பகுதியில் ஒரு பாலத்தில் பல நபர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு ஜீப் வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிரே ஆட்டோ வரவு அதன் மேல் மோதிவிடாமல் இருக்க டிரைவர் ஜீப்பை வளைக்க அது தவறி ஆற்றில் அப்படியே கவிழ்ந்தது.

ஜீப் மூழ்க தொடங்கியதும் உள்ளிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் ஜீப்பினுள் மூழ்கி கொண்டிருந்த குழந்தை ஒன்றை வெளியே தூக்கினார். பாலத்தில் மக்கள் நின்று கொண்டிருந்த பக்கமாக உடனடியாக குழந்தையை தூக்கி வீசினார். ஆனால் குழந்தை மீண்டும் தவறி தண்ணீரில் விழுந்தது. அதற்குள் அருகிலிருந்தவர்கள் குதித்து குழந்தையை மீட்டனர்.

மேலும் சிலர் ஜீப் மூழ்கிய இடத்திற்கு நீந்தி சென்று அங்குள்ளவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தனர். விபத்து நிகழ்ந்ததும் உடனே சுற்றியிருந்த பொதுமக்கள் உதவியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments