Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்! என்ன காரணம்?

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (12:29 IST)
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மகள் திருப்பதியில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக செய்திகள் வெளியான நிலையில், கடந்த 10 நாட்களாக பூஜை செய்து வரும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்தார்.

அவர் செய்யும் பிராய தீட்சை பூஜை இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து, திருப்பதிக்கு வந்த பவன் கல்யாண் மலைப்பாதையில் பாதயாத்திரை ஆக சென்றார். அவருடன் அவரது மகள்கள் ஆத்யா மற்றும் போலானா ஆகியோர் சென்றனர்.

இந்த நிலையில், ஒருவரின் நம்பிக்கையை அறிவிக்கும் நடைமுறை திருமலையில்  , இந்துக்கள் அல்லாதவர்கள் படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே வைகுண்ட வரிசை வளாகத்தில் அனுமதிக்கப்படுவர். இதன்படி பவன் கல்யாண் மூன்றாவது மனைவி ஹிந்து அல்ல என்பதால், அவரது மகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திய வாங்கியது, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மறைமுகமாக பாடம் கற்பித்து கொடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்! என்ன காரணம்?

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

தாயை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகன்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

இன்று மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த பக்தர்கள்

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments