Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

Rajini

Senthil Velan

, சனி, 28 செப்டம்பர் 2024 (13:26 IST)
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, சாரி - சாரி, நோ கமெண்ட்ஸ் என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
 
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  ‘வேட்டையன்’ திரைப்படம், அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 
 
இந்த திரைப்படத்தின் மனசிலாயோ பாடல் அண்மையில் வெளியாகி தற்போது வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் கடந்த 20ம் தேதி வெளியாகி கவனம் பெற்றது.  
 
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். தர்பாருக்கு பிறகு படம் முழுவதும் போலீசாக நடிப்பது வித்தியாசமாக இருந்தது என்று அவர் கூறினார்.  

 
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாரி.. சாரி… நோ கமெண்ட்ஸ் என அவர் பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!