Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன்: ஜெகன் மோகன் ரெட்டி ஆதங்கம்..!

Siva
புதன், 5 ஜூன் 2024 (16:21 IST)
மக்களுக்கு ஏராளமான நன்மை செய்தபோதும் தோல்வியை தழுவியுள்ளேன் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன் என்றும் அவர் கூறினார்

பெண்களுக்கு நலத்திட்டங்கள், தாய்மார்கள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 15,000, 26 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை , ,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணம், பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி, விவசாயிகள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி என பல்வேறு நன்மைகள் செய்தேன்

என்னுடைய அரசில் நன்மை பெற்றவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் எது நடந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments