Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க 150 பேர், எழுந்து வந்தா அவ்வளவுதான்... நாயுடுவை கதிகலங்க வைத்த ஜெகன்!

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (18:01 IST)
ஆந்திரா சட்டசபையில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வைரலாகி வருகிறது. 
 
ஆந்திர சட்டசபையில் வட்டியில்லா கடன் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருந்த போது, அவர் தவறான தகவலை கூறிவதாக எதிர்கட்சியினர் ஜெகனை பேச விடாமல் சத்தம் போட்டு வந்தனர். 
 
இதனால் கடுப்பான ஜெகன் ஆவேசமாக, இதற்கு முன்னர் நீங்கள் பேசும்போது நாங்கள் யாராவது வாய் திறந்தோமா? உங்களுக்கான மரியாதையைத் தர வேண்டும் என்பதால் அமைதி காத்தோம் அல்லவா? 
 
இங்கு எங்கள் ஆதரவாளர்கள் 150 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் உங்கள் இடத்திற்கு வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. அறிவில்லையா உங்களுக்கு என ஆவேசமாக பேசினார். 
 
மேலும், நீங்கள் கண்களைப் பெரிதாக்கி எங்களைப் பாத்தால் நாங்கள் என்ன பயந்துவிடுவோமா? முதலில் உங்கள் ஆதரவாளர்களை அமர சொல்லுங்கள் என காட்டமாக பேசினார். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments