Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு பங்காக இருந்தால் வாங்கிவிடுவேன்; ஆனந்த மஹிந்திரா அதிரடி டுவீட்

தமிழ்நாடு பங்காக இருந்தால் வாங்கிவிடுவேன்; ஆனந்த மஹிந்திரா அதிரடி டுவீட்
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (18:51 IST)
தமிழ்நாடு ஒரு பங்காக இருந்தால் அதை வாங்கி நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பேன் என்று ஆனந்த மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தினசரி செய்திகளுக்கு தனது கருத்தை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியில் வருகை குறித்த செய்தி ஒன்றுக்கு அதிரடியாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தை அடுத்து இந்தியா முழுவதும் இது முக்கிய செய்தியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு மட்டும் சந்தையின் ஒரு பங்காக இருந்தால். அதை வாங்கி நீண்ட நாள் வைத்திருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதில் டுவீட் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர்டெல்லை எதிர்த்து புதுவேகம் காட்டிய ஜியோ!!