Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது இளைஞரை ஆணுறுப்பை வெட்டி பிச்சையெடுக்க வைத்த திருநங்கைகள்!

Prasanth Karthick
புதன், 21 ஆகஸ்ட் 2024 (09:14 IST)

பெங்களூரில் 18 வயது இளைஞரை திருநங்கைகள் கடத்தி சென்று ஆண் உறுப்பை வெட்டி பிச்சை எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பெங்களூர் டிஜிஹல்லி பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் 18 வயது இளைஞர் ஒருவர். அங்கு டீக்கடைக்கு தேநீர் அருந்த வரும் திருநங்கைகளோடு அவருக்கு சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞரிடம் பேசிய திருநங்கைகள், இதைவிட அதிக வருமானம் பெறுவதற்கு தங்களிடம் வேலை இருப்பதாக ஆசைக்காட்டியுள்ளனர்.

 

பின்னர் அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி தெருக்களில் பிச்சையெடுக்க வைத்துள்ளனர். பின்னர் கடந்த மாதம் 12ம் தேதியன்று அந்த இளைஞர் வசிக்கும் இடத்திற்கு சென்ற திருநங்கைகள், அவர் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டால் பிச்சை எடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கும் என பேசியுள்ளனர்.

 

ஆனால் அதற்கு அந்த இளைஞர் மறுத்ததால் அவரை கடத்தி சென்று மயக்க ஊசி செலுத்தி அவரது ஆண் உறுப்பை நீக்கியுள்ளனர். மேலும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த இளைஞர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபட்ட 5 திருநங்கைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்