Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 வயது இளைஞரை ஆணுறுப்பை வெட்டி பிச்சையெடுக்க வைத்த திருநங்கைகள்!

Advertiesment
Bangalore

Prasanth Karthick

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (09:14 IST)

பெங்களூரில் 18 வயது இளைஞரை திருநங்கைகள் கடத்தி சென்று ஆண் உறுப்பை வெட்டி பிச்சை எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பெங்களூர் டிஜிஹல்லி பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் 18 வயது இளைஞர் ஒருவர். அங்கு டீக்கடைக்கு தேநீர் அருந்த வரும் திருநங்கைகளோடு அவருக்கு சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞரிடம் பேசிய திருநங்கைகள், இதைவிட அதிக வருமானம் பெறுவதற்கு தங்களிடம் வேலை இருப்பதாக ஆசைக்காட்டியுள்ளனர்.

 

பின்னர் அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி தெருக்களில் பிச்சையெடுக்க வைத்துள்ளனர். பின்னர் கடந்த மாதம் 12ம் தேதியன்று அந்த இளைஞர் வசிக்கும் இடத்திற்கு சென்ற திருநங்கைகள், அவர் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டால் பிச்சை எடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கும் என பேசியுள்ளனர்.

 

ஆனால் அதற்கு அந்த இளைஞர் மறுத்ததால் அவரை கடத்தி சென்று மயக்க ஊசி செலுத்தி அவரது ஆண் உறுப்பை நீக்கியுள்ளனர். மேலும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த இளைஞர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபட்ட 5 திருநங்கைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிகள் பலாத்காரம்! ரயிலை மறித்து போராடிய மக்கள் மீது தடியடி தாக்குதல்! - பத்லாபூரில் அதிர்ச்சி சம்பவம்!