Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டை உலுக்கிய ஆணவக்கொலை – பெண்ணின் தந்தை தற்கொலையால் பரபரப்பு !

நாட்டை உலுக்கிய ஆணவக்கொலை – பெண்ணின் தந்தை தற்கொலையால் பரபரப்பு !
, ஞாயிறு, 8 மார்ச் 2020 (13:40 IST)
அம்ருதா மற்றும் பிரணய்

நாட்டையே உலுக்கிய தெலங்கானா மாநில பிரனய் கொலைவழக்கில் அம்ருதாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த  பிரனய் குமார்,அம்ருதா தம்பதியினர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவர்களின் திருமனத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனைக்கு வெளியே பிரனயை, அம்ருதாவின் தந்தையால் அனுப்பப்பட்டகூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த சமபவத்தில் அம்ருதாவும் காயமடைந்தார்.
webdunia
தந்தை மாருதி ராவுடன் அம்ருதா


இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்தவரையும் அம்ருதாவின் தந்தையையும் காவல்துரை கைது செய்துள்ளது. அதன் பின்னர் நான்கு மாதத்தில் அம்ருதாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபப்ட்டுள்ள நிலையில் அம்ருதாவின் தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது மாருதி ராவ் உள்ள ஆர்யா வைஷ்ய பவன் ஹோட்டலில் அறை எண் 306ல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த தற்கொலை காரணமாக அந்த வழக்கில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைத்தார் !