Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்த ராஜ்நாத் சிங், அமித்ஷா: என்ன காரணம்?

பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்த ராஜ்நாத் சிங், அமித்ஷா: என்ன காரணம்?
, செவ்வாய், 29 ஜூன் 2021 (16:59 IST)
பிரதமர் மோடியை உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று அவசரமாக சந்தித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களும் சந்தித்து உள்ளதாக தெரிகின்றது 
 
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ட்ரோன் மூலம் குண்டுவெடிப்பு நடைபெற்று வருவது மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவது குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது
 
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், ஜம்மு-காஷ்மீர் அரசியல் குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
 
நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று சீனியர் அமைச்சர்கள் திடீரென பிரதமர் மோடியை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது டெல்லி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா 3வது அலை: 100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு