Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் சோப்புக்கட்டி வருதே! அதிர்ச்சியை கொடுத்த அமேசான்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (22:00 IST)
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் கொடுப்பது என்பது தற்போது அன்றாட வழக்கமாகிவிட்டது. சோப்பு, சீப்பு முதல் ஸ்மார்ட்போன்கள் வரை ஆன்லைனில் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்து வருகின்றனர்



 
 
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சிராஹ் தவான் என்பவர் ஒன்ப்ளஸ் மாடல் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். இரண்டே நாட்களில் பார்சலும் வந்தது. டெலிவரி கொடுத்த நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு ஆசை ஆசையாய் பார்சலை பிரித்தார். ஆனால் உள்ளே இருந்ததோ ஸ்மார்ட்போனுக்கு பதில் சோப்புக்கட்டி
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தவான் உடனடியாக அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். ஆனால் அவர்கள் கம்ப்ளைண்ட் என்று ஒரு நம்பர் கொடுத்து அதில் கூறுமாறு சொன்னார்களாம். அதற்கு போன் செய்தால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. உடனே கடுப்பான தவான் சோப்புக்கட்டியை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். இது நடந்து ஒருசில நிமிடங்களில் அமேசான் பெயர் இந்திய அளவில் டேமேஜ் ஆனது. உடனடியாக தவானுக்கு நீதியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments