Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெய் ஸ்ரீராமை நான் கேட்டது கூட கிடையாது’: பொருளாதார நிபுணரின் சர்ச்சைப் பேச்சு

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (17:28 IST)
இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவில் யாரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறி தான் கேட்டதில்லை என கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவயியலாலரான அமர்த்தியா சென், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இதற்கு முன் கொல்கத்தாவில் ஜெய் ஸ்ரீராம் என யாரும் கூறி தான் கேட்டதில்லை எனவும், சமீப காலங்களில் மக்களை அடித்து துன்புறுத்தி ’ஜெய் ஸ்ரீராம்’ எனும் வார்த்தையை பயன்படுத்த வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வங்காள கலாச்சாரத்துடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ க்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறினார். மேற்கு வங்கத்தில் அன்னை துர்கையின் வழிபாடு தான் சிறந்த வழிபாடு எனவும், ராமநவமியுடன் துர்கா வழிபாட்டை ஒப்பிடமுடியாது எனவும் அமர்தியா சென் கூறியுள்ளார்.

அமர்த்தியா சென்னின் இந்த கருத்தால், ராமர் பகதர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பேச்சால் இந்து மத அமைப்பினர் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments