Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டியாலாவில் மண்ணை கவ்விய அமரீந்தர் சிங்! – பஞ்சாபை பிடித்த ஆம் ஆத்மி!

பட்டியாலாவில் மண்ணை கவ்விய அமரீந்தர் சிங்! – பஞ்சாபை பிடித்த ஆம் ஆத்மி!
, வியாழன், 10 மார்ச் 2022 (13:18 IST)
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் புதிய கட்சி தொடங்கிய அமரீந்தர் சிங் தோல்வியை தழுவினார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா; 100 தமிழர்களுக்கு அனுமதி! – இலங்கை அரசு அறிவிப்பு!