Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையா?

bank
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:43 IST)
வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றாலும் இது குறித்த செய்தி கசிந்து கொண்டிருப்பதால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 108 அவசர ஊர்திகள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு