Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் உள்ள கைதிகளுக்கு மதுபானம்? விசாரணைக்குழு அமைப்பு

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (12:49 IST)
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 டெல்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 7ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிறைத்துறை இயக்குனர் சஞ்சய் பணிவால் என்பவர் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் விசாரணை குழுவுக்கு அளவில் உள்ள ஒரு அதிகாரி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு திகார் சிறை சென்று தீவிரமாக விசாரணை செய்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments