Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபேக் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை....மத்திய அரசு எச்சரிக்கை

ஃபேக் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை....மத்திய அரசு எச்சரிக்கை
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (15:19 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது புகைப்படத்தை மார்பிங் செய்து போலி வீடியோ ‘DeepFake Edit ‘ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா ‘’இணையதளத்தில் வைரலாகி வரும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட DeeoFake Edit வீடியோ பற்றி பேசுவதற்கு வருத்தமாக உள்ளது.

தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறி கண்டனம் தெரிவித்தார்.

ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர்  ''நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான போலி வீடியோ விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, தனது உடலையும்,  நடிகையின் முகத்தையும் பயன்படுத்தி டீப் பேக் வீடியோவை உருவாக்கியதற்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று  இங்கிலாந்து வாழ் இந்திய பெண்மணி ஜாரா படேல் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய கமல்