Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மினிமம் ரீசார்ஜ் ப்ளானை நிறுத்திய ஏர்டெல்! அதிர்ச்சியில் உறைந்த பயனாளர்கள்!

Prasanth K
புதன், 20 ஆகஸ்ட் 2025 (09:32 IST)

இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது குறைந்த பட்ச ரீசார்ஜ் ப்ளான் 249 ரூபாய் ப்ளானை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் 4ஜி, 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் ஜியோ, ஏர்டெல் நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஏர்டெல்லில் குறைந்த பட்ச ப்ளானாக 249 ரூபாய் ரீசார்ஜ் ப்ளான் இருந்து வந்தது.

 

இந்த ப்ளானில் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வசதியை பெற முடியும். பெரும்பாலான ஏர்டெல் பயனாளர்களின் முதல் தேர்வாக இருந்த இந்த குறைந்த ரீசார்ஜ் ப்ளானை தற்போது முற்றிலுமாக நீக்குவதாக அறிவித்துள்ளது ஏர்டெல். இதனால் பயனாளர்கள் ஏர்டெல்லின் பிற விலை உயர்ந்த ரீசார்ஜ் ப்ளான்களை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஜியோவிலும் இதே போல இருந்த குறைந்த விலை ரீசார்ஜ் ப்ளான் முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏர்டெல்லும் அதையே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்த நாய் கடித்து ஏழை தொழிலாளி பலி.. அலட்சியத்தால் பறிபோன உயிர்..!

இன்சூரன்ஸ் பாலிசி காலாவதி ஆகிவிட்டதா? எல்.ஐ.சி தரும் புதுப்பிக்கும் திட்டம்..!

"வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டு.. அவசர அவசரமாக யூடியூப் வீடியோக்கள் நீக்கம்..!

30 நாட்கள் சிறையில் இருந்தால் 31வது நாளில் பதவி நீக்கம்.. அமித்ஷா தாக்கல் செய்யும் அதிரடி மசோதா..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments